காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

Archive for the ‘Batticaloa’ Category

தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் கொழும்பு கூடைப்பந்தாட்ட கழகம் வெற்றியீட்டியது.

Posted by Kattankudi Web Community on 30/04/2012

-நமது செய்தியாளர்-

அருட்தந்தை கேபயர் வெற்றிக்கேடயத்திற்காக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியில் கொழும்பு கூடைப்பந்தாட்ட கழகம் வெற்றியீட்டியது. Read the rest of this entry »

Posted in Batticaloa, News | Leave a Comment »

மட்டக்களப்பில் சிவில் சமூக அமைப்பு உதயம்

Posted by Kattankudi Web Community (KWC) on 29/04/2012

- நமது செய்தியாளர் -

மட்டக்களப்பில் முதன்முறையாக சிவில் சமூக அமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் சட்டத்தரணிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக சேவையாளர்கள், ஆன்மீகப் பணி செய்வோர், ஓய்வு பெற்ற நிர்வாக சேவை அதிகாரிகள் என தமிழ் முஸ்லிம் சமூகங்களை உள்ளடக்கிய பலர் இடம்பெறுகின்றனர்.

Read the rest of this entry »

Posted in Batticaloa | 2 Comments »

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

Posted by Kattankudi Web Community (KWC) on 28/04/2012

- நமது செய்தியாளர் -

கிழக்கு பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா இன்று (28.04.2012) கிழக்கு பல்கலைக்கழக கல்லடியிலுள்ள சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.

Read the rest of this entry »

Posted in Batticaloa | 1 Comment »

மஞ்சந்தொடுவாயில் முதலை பிடிபட்டது – படம் மற்றும் காணொளி இணைப்பு

Posted by Kattankudi Web Community (KWC) on 26/04/2012

- நமது செய்தியாளர் -

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தோணா கால்வாயில் நேற்று புதன்கிழமை (25.04.2012) காலை முதலையொன்றை பொதுமக்கள் பிடித்துள்ளனர்.

இத் தோணா கால்வாயில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த இந்த முதலையை மக்கள் பிடித்து கட்டி வன ஜீவராசிகள் அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்தனர்.

Read the rest of this entry »

Posted in Batticaloa | 1 Comment »

சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பாளராக கலாநிதி கே.பிரேம் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Posted by Kattankudi Web Community on 19/04/2012

நமது செய்தியாளர்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடியிலுள்ள சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பாளராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாளர் பதில் உப வேந்தர் கலாநிதி கே.பிரேம் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். Read the rest of this entry »

Posted in Batticaloa, News | Leave a Comment »

ஆரையம்பதி பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Posted by Kattankudi Web Community on 17/04/2012

-நமது செய்தியாளர்-

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலீஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்றை காத்தான்குடி பொலிசார் நேற்று (16.4.2012) காலையில் மீட்டுள்ளனர்.  Read the rest of this entry »

Posted in Batticaloa, News | Leave a Comment »

மட்டக்களப்பில் சிலை உடைப்பு தொடர்பாக ஆராயும் விஷேட உயர்மட்டக் கூட்டம் இன்று இடம்பெற்றது

Posted by Kattankudi Web Community on 09/04/2012

-நமது செய்தியாளர்-
மட்டக்களப்பு நகரில் கடந்த வெள்ளிக்கிழமை மகாத்மா காந்தயின் உருவச்சிலை உட்பட நான்கு பெரியார்களின் உருவச்சிலைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆராயும் விஷேட உயர்மட்ட கூட்டம் ஒன்று மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் இன்று (9.4.2012) காலை நடைபெற்றது. Read the rest of this entry »

Posted in Batticaloa, News | Leave a Comment »

வெருகல் படுகொலை நினைவு நாள்

Posted by Kattankudi Web Community on 08/04/2012

அபூ ஜுமைல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டதை  நினைவுகூர்ந்து நடாத்தப்படுகின்ற வெருகல் படுகொலை நினைவு நாள் 10.04.2012 அன்று கதிரவெளி சிறுவர் பூங்காவில் பி.ப.04.00 மணிக்கு இடம்பெறும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின்  நினைவு நாள் அனுஷ்டிப்பு  நிகழ்வு கட்சியின் தேசியத் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம் பெறும்.

Read the rest of this entry »

Posted in Batticaloa, News | Leave a Comment »

மட்டக்களப்பு சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிரமதானம்

Posted by Kattankudi Web Community on 08/04/2012

நமது செய்தியாளர்

மட்டக்களப்பு சிறைச்சாலையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கலலடியிலுள்ள விபுலானந்தர் முதியோர் இல்லத்தில் நேற்று (7.4.2012) பாரியளவிளான சிரமதானமொன்று நடைபெற்றது. மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் ஏ.கித்சிறி பண்டார தலைமையில் நடைபெற்ற இச்சிரமதான வைபவத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், சிறைச்சாலை நலன்புரி  அதிகாரிகள் சிறைக்கைத்திகள் கலந்து கொண்டனர்.

Read the rest of this entry »

Posted in Batticaloa, News | Leave a Comment »

மட்டக்களப்பில் 50 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக வேளாண்மைச் செய்கை

Posted by Kattankudi Web Community (KWC) on 04/04/2012

- அபூ ஜுமைல் -

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 50 ஆயிரம் ஏக்கரில்நசிறுபோகவேளாண்மைச்செய்கை பண்ணப்படவுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைகக்கள பிரதி ஆணையாளர் டாக்டர்.ஆர்.ருஸாந்தன் தெரிவித்தார்.

Read the rest of this entry »

Posted in Batticaloa | Leave a Comment »

பொதுச்சந்தையில் பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது சட்டநடவடிக்கை

Posted by Kattankudi Web Community on 28/03/2012

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்

மட்டக்களப்பு மன்முணை வடக்கு ஆரையம்பதி பிரதேச சபைக்கு சொந்தமான பொதுச்சந்தையில் பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது பொதுச் சுகாதார பிரிவினர் சட்டநடவடிக்கை எடுத்துள்ளனர்.

Read the rest of this entry »

Posted in Batticaloa, News | Leave a Comment »

மட்டக்களப்பில் மருத்துவக் கண்காட்சி ஆரம்பம் – எஸ் பீ திசாநாயக ஆரம்பித்து வைத்தார்

Posted by Kattankudi Web Community (KWC) on 28/03/2012

- நமது செய்தியாளர் -

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் எற்பாட்டில் மருத்துவக்கண்காட்சி இன்று (28.03.2012)காலை மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read the rest of this entry »

Posted in Batticaloa | Leave a Comment »

OL பரீட்சையில் மட்/ வின்சென்ட் கல்லூரி மாணவியர் சாதனை

Posted by Kattankudi Web Community (KWC) on 28/03/2012

- நமது செய்தியாளர் -

கடந்த வருடம் நடைபெற்ற கல்விப்பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் 18 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ திறமை சித்திகளை பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் அதிபர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

Read the rest of this entry »

Posted in Batticaloa | 1 Comment »

ஆற்று மண் ஏற்றி விற்பனையில் ஈடுபட்டு வரும் ரக்டர் உரிமையாளர்கள் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்.

Posted by Kattankudi Web Community on 27/03/2012

-நமது செய்தியாளர்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆற்று மண் ஏற்றி விற்பனையில் ஈடுபட்டு வரும் ரக்டர் உரிமையாளர்கள் நலன்புரிச் சங்கம் இன்று பிள்ளையாரடியில் இருந்து மட்டக்களப்பு வரை தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி கவனயீர்ப்பு வாகனப் பேரணியில் இன்று காலை ஈடுபட்டதுடன் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஐரினையும் அதிகாரிகளுக்குச் சமர்ப்பித்தனர். Read the rest of this entry »

Posted in Batticaloa, News | Leave a Comment »

பாதையை விட்டுவிலகி மட்டு.வாவிக்குள் விழுந்த வேன்-வேனுக்கு பலத்த சேதம்

Posted by Kattankudi Web Community on 26/03/2012

அபூ ஜுமைல்

மட்டக்களப்பு—பொலநறுவை பிரதான சாலையில் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட ஊறணி பிரதான வீதியில் அதிக வேகமாக வந்த வேனொன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வாவிக்குள் விழுந்த சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.

Read the rest of this entry »

Posted in Batticaloa, News | Leave a Comment »

ஆசிரிய சிக்கன கடன் கூட்டுறவுச் சங்கத்தின் கிழக்கு மாகாணத்திற்கான நடமாடும் சேவை

Posted by Kattankudi Web Community on 25/03/2012

-நமது செய்தியாளர்-

ஆசிரிய சிக்கன கடன் கூட்டுறவுச் சங்கத்தின் கிழக்கு மாகாணத்திற்கான நடமாடும் சேவையொன்று நேற்று (24.3.2012) மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read the rest of this entry »

Posted in Batticaloa, News | Leave a Comment »

மட்டக்களப்பு சிறைச்சாலையில் காசநோய் தொடர்பான விழிப்புனர்வு நிகழ்வு

Posted by Kattankudi Web Community on 25/03/2012

-நமது செய்தியாளர்-

உலக காசநோயாளர் தினத்தையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையில் காசநோய் தொடர்பான விழிப்புனர்வு நிகழ்வொன்று நேற்று (24.3.2012) நடைபெற்றது. Read the rest of this entry »

Posted in Batticaloa, News | Leave a Comment »

இன நல்லுறவுக்கான சிரமதானப்பணியொன்று மட்டக்களப்பில் ஆரம்பம்

Posted by Kattankudi Web Community on 24/03/2012

-நமது செய்தியாளர்-

இன நல்லுறவுக்கான சிரமதானப்பணியொன்று இன்று (24.3.2012) காலை மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சொண்ட் நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாநகர சபையுடன் இணைந்து சர்வோதயம் மற்றும் சமுக அபிவிருத்தி அமைப்பு என்பன போன்ற நிறுவனங்களின் உதவியுடன் இந்த சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டது. Read the rest of this entry »

Posted in Batticaloa, News | Leave a Comment »

ஓமடியாமடு – றிதிதென இணைப்பு வீதி மற்றும் தினசிங்கன்குளம் ஆகியன கிழக்கு முதல்வரால் திறந்து வைக்கப்பட்டன

Posted by Kattankudi Web Community (KWC) on 24/03/2012

- அபூ ஜுமைல் -

கிழக்கு மாகாண முதலமைச்சரின் 2011ம் ஆண்டிற்கான பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஓமடியாமடு மற்றும் றிதிதென ஆகிய வீதிகளை இணைக்கின்ற வீதி நேற்று கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் திறந்து வைக்கப்பட்டது.

Read the rest of this entry »

Posted in Batticaloa | Leave a Comment »

கிராமத்திற்கு ஒரு அபிவிருத்தி திட்டமெனும் கமநெகும அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பன வைபவம்

Posted by Kattankudi Web Community on 23/03/2012

நமது செய்தியாளர்

கிராமத்திற்கு ஒரு அபிவிருத்தி திட்டமெனும் கமநெகும அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பன வைபவம் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிரான்குளத்தில் நடைபெற்ற போது பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் பிரதேச உறுப்பினர் முத்துலிங்கம் ஆகியோர் வரவேற்கப்படுவதையும் Read the rest of this entry »

Posted in Batticaloa | Leave a Comment »

கிழக்கின் முதலாவது மருத்துவ கண்காட்சி மட்டக்களப்பில் – அமைச்சர் எஸ்.பி ஆரம்பிக்கிறார்

Posted by Kattankudi Web Community (KWC) on 22/03/2012

-அபூ ஜுமைல்-

கிழக்கு மாகாணத்தின் முதலாவது மருத்து கண்காட்சி எதிர்வரும் 28ம் திகதி முதல் 31ம் திகதி வரை கிழக்கு பல்கலை கழக மருத்துபீட அரசடி வளாகத்தில் பல்கலை கழக மருத்துவபீட பீடாதிபதி வைத்திய நிபுணர் Read the rest of this entry »

Posted in Batticaloa | Leave a Comment »

பௌத்த விகரரையில் ஜெனீவா மாநாடு குறித்து தமிழ் பட்டதாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு

Posted by Kattankudi Web Community on 21/03/2012

-அபூ ஜுமைல்-
ஜெனீவாவில் இடம் பெறும் மனித உரிமைகள் மாநாடு தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த தமிழ் பட்டதாரிகளுக்கு தெளிவூட்டும் செயலமர்வு வாழைச்சேனை ‘ புத்த ஜெயந்தி விகாரையில் திங்கள் மாலை இடம் பெற்றது. Read the rest of this entry »

Posted in Batticaloa, News | Leave a Comment »

148 வது பொலீஸ் தியாகிகள் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது

Posted by Kattankudi Web Community on 21/03/2012

-நமது செய்தியாளர்-

148 வது பொலீஸ் தியாகிகள் தினம் இன்று (21.3.2012) காலை மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்திற்கு முன்பாக நடைபெற்றது. Read the rest of this entry »

Posted in Batticaloa, News | Leave a Comment »