அன்பார்ந்த இணையத்தள அங்கத்தவர்களே,
தாருள் அதர் நிறுவனத்தினால் தொடங்கப்போகும் ஜூம்ஆ சம்பந்தமாக தங்களுடன் சில கருத்துக்களை பகிரந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
நமது பிரதேசம் அனைத்து விடயத்திலும் பல முன்மாதிரிகளை ஏனைய பிரதேசங்களுக்கு காட்டிக் கொடுக்கின்ற ஒரு ஊர். உண்மையில், ஒவ்வொரு செயற்பாடுகளுக்குப் பின்னாலும் அதனை உருவாக்கியவர்கள் மிகக் கவனமாக அதனைத் திட்டமிட்டு செய்திருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது.
இவ்வகையில்தான் நமது பிரதேச மக்களின் நன்மை கருதி எவ்வாறு ஜூம்ஆக்கள் அமைய வேண்டும் என்று ஒப்பந்தங்களும் நிபந்தனைகளும் காணப்படுகின்றன. ஆனால், சிலர் இக்கட்டுக் கோப்புகளை மார்க்கத்தின் பெயரால் சிதைக்க முற்படுவது மனவேதனையாகும். ஏனெனில், ஒன்றை மிகச் சிறப்பாக உருவாக்குவதென்பது மிகக் கடினமான விடயம். ஆனால் அதை சிதைத்து விடுவது என்பது மிக இலகுவான காரியம். Read the rest of this entry »
Filed under: Information
அண்மைய கருத்துகள்