காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

Archive for the ‘Poem’ Category

ஒரு தாயின் மன்னிப்புக் கடிதம்

Posted by Kattankudi Web Community on 26/05/2012

அன்பு மகளே… “ஒரு மௌன அழைப்பில்’
உன் ஆதங்கம் கண்டேன்
என் சொர்க்கத்துக் கனியே! என்னை மன்னித்து விடு.
உன்னை எனது வயிற்றிலேயே கொலை செய்த பாவிதான் நான்

Read the rest of this entry »

Posted in Poem | 1 Comment »

மூட்டைப் பூச்சியை விட மோசமானவர்கள் – ஓதப் படாத குத்பாக்கள்! பாகம்: 02

Posted by Kattankudi Web Community (KWC) on 11/05/2012

-மதியன்பன்-

பலரது வீட்டில்
அடுப்பு எரிகிறதோ இல்லையோ
வயிறு எரிகிறது
வட்டிக்குப் பணம் கட்டிக்கட்டி..!

பலர்
வீடு கட்டுவதற்காகத்தான்
வட்டிக்கு வாங்கினார்கள்
Read the rest of this entry »

Posted in Poem | 12 Comments »

வாழ்க்கை

Posted by Kattankudi Web Community on 08/05/2012

அழகுதான் வாழ்க்கை
என்றால்
பூக்கள் மட்டும்
போதுமிங்கு

அன்புதான்
வாழ்க்கை என்றால்
தாய் மட்டும்
தாராளமாய்ப் போதும்

Read the rest of this entry »

Posted in Poem | 1 Comment »

அக்கினி வெயிலுக்கே அசையாதவன் ஊமை வெயிலுக்கா உருகப் போகிறான் -கருத்துக்குப் பொறுப்பு கவிதையாக்கியவன்-

Posted by Kattankudi Web Community (KWC) on 02/05/2012

-மதியன்பன்-

உதவித் தவிசாளருக்கு
ஒரு விண்ணப்பம்
ஹறாத்தைக் கண்டித்து
கவிதை எழுதியது நான்.
ஆனால்
தண்டிப்பது இன்போவை. ?
எய்தவன் நானிருக்க
அம்பை நோவதில்
அர்த்தமென்ன இருக்கிறது..?

Read the rest of this entry »

Posted in Poem | 29 Comments »

ஏறும் கொடியும் இறங்கும் ஈமானும்

Posted by Kattankudi Web Community (KWC) on 26/04/2012

-மதியன்பன் -

பறிபோவது
பள்ளிவாயல் மட்டுமல்ல
எமது ஈமானும் தான்..?
ஏறும் கொடியோடு
இறங்கிப்போகிறது
கல்முனை கடற்கரைப் பள்ளியில்..! Read the rest of this entry »

Posted in Poem | 20 Comments »

முஸ்லிம்களின் இருப்பும், தலைவர்களின் பொறுப்பும்!

Posted by Kattankudi Web Community (KWC) on 21/04/2012

-மதியன்பன்-

கவலை கொண்டோர்களின்
கண்ணீர்
கரைவதற்கு முன்பாகவே
இறைவா!
உன் இல்லத்தை
உறுதிப்படுத்தி விட்டாய்….!
அல்ஹம்து லில்லாஹ்…!

Read the rest of this entry »

Posted in Poem | 1 Comment »

ஹிந்தாவின் ஈரலும், மஹிந்தாவின் கீறலும்

Posted by Kattankudi Web Community (KWC) on 20/04/2012

-மதியன்பன்-

ஆயுதப் படைகளின் ஆசியுடன்
அல்லாஹ்வின் இல்லத்துள்
இன்று
அத்துமீறல் அரங்கேறியது.
பேரினவாதிகளின்
மற்றுமொரு
போரியல் பொறிமுறை..!

Read the rest of this entry »

Posted in Poem | 6 Comments »

இவ்வளவு கெதியான முற்றுப்புள்ளியா ???

Posted by Kattankudi Web Community on 14/04/2012

செயலற்ற கரங்களை

நீட்டினேன், நீளவில்லை

கொட்டாவி வந்தபோது

வாய்கள் திறக்கவில்லை

கூடிநின்று ஒப்பாரிவைத்த Read the rest of this entry »

Posted in Poem | 5 Comments »

உங்களுக்கும் ஒரு சிலை வைக்கலாம்..? (இரண்டாம் இணைப்பு)

Posted by Kattankudi Web Community (KWC) on 07/04/2012

-காத்தான்குடி மதியன்பன்-

இக்கட்டில் மாட்டிக் கொண்டோம்
என்றுதான் மாலை போட்டோம்
இப்படி யாகுமென்று
எண்ணவில்லை கனவில் கூட!
தப்பிக் வழியுமில்லை.
தவறென்று சொல்லுதற்கு
தைரியமும் எமக்கு இல்லை.!

Read the rest of this entry »

Posted in Poem | 27 Comments »

ஊர் பெயரை மாற்றாதே!

Posted by Kattankudi Web Community (KWC) on 01/04/2012

-காத்தான்குடி அனு-

இன்பெயரை மாற்றுதற்குத் துணிந்த கூட்டம்
எடுத்தமுடி வால்நானும் இடிந்து போனேன்!
பொன்பெயரென் றுலகமெலாம் புகழே கொண்ட
பெருவூரின் நாமமதோ வரலா றாகும்!
Read the rest of this entry »

Posted in Poem | 8 Comments »

முட்டைக்கரு

Posted by Kattankudi Web Community (KWC) on 30/03/2012

-காத்தநகர் முகைதீன்சாலி-

நாம்
முட்டைக்குள் கருவானவர்கள்

இருந்தாலும்
இரு வேறு நிறமானவர்கள்

Read the rest of this entry »

Posted in Poem | 4 Comments »

இளம்பிறையே ! உனை மறந்திடுமோ உளம்!!

Posted by Kattankudi Web Community (KWC) on 06/03/2012

-காத்தான்குடி மதியன்பன் -

எண்ணிலாச் சேவையால் எங்களுர் ராண்டவனே
எத்தரின் குண்டுக்குச் சரிந்தாய் -நீ
எங்களை விட்டுமே பிரிந்தாய்.
உண்மையைச் சொன்னதால் உத்தமனானவனே
ஊருக்கு நீதானே களம்.-இங்கு
உனை மறந்திடுமோ உளம். Read the rest of this entry »

Posted in Poem | 3 Comments »

திருடனே திருட்டை விசாரிக்கிறான்

Posted by Kattankudi Web Community (KWC) on 27/02/2012

காத்தநகர் முகைதீன்சாலி

வெள்ளைக்
கோட்டணிந்த
கள்ளப் பூனை
அமெரிக்காவே!

Read the rest of this entry »

Posted in Poem | 1 Comment »

நிலையற்ற மனித வாழ்வு

Posted by Kattankudi Web Community on 16/02/2012

காத்தநகர் முகைதீன்சாலி

சொத்து சுகம் கொண்டு
சுகதேகியாய் வாழ்ந்தாலும்
முதுமை தேசத்திலொருநாள்
முகாமிடத்தான் வேண்டும்.

Read the rest of this entry »

Posted in Poem | 1 Comment »

நிச்சயிக்கப்பட்ட அந்த நாளிகை

Posted by Kattankudi Web Community on 26/01/2012

கருத்து வேறுபாடற்ற ஒரே தலைப்பு, அது மரணம் என்பது மட்டுமே! இரண்டாம் கருத்துக்கு இடம்பாடுள்ள விடயங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ளும் நாம், நிச்சயிக்கப்பட்ட அந்த நாளிகையை மறந்து விட்டோமா? அல்லது உலக வாழ்க்கையும் சடவாதமும் நம்மை மறக்கடிக்கச் செய்து விட்டதா?

Read the rest of this entry »

Posted in Poem | Leave a Comment »

பிறமதக் கலாச்சாரத்தை..

Posted by Kattankudi Web Community (KWC) on 15/01/2012

சேதப்படுத்தப்பட்ட விபுலானந்தர் சிலை-மதியன்பன்-

அடுத்தவ ரோடு சேர்ந்து
அமைதியாய் வாழும் உறவை
தடுத்திட வேண்டும் என்ற
தவறான சிந்தனைக்குள்
Read the rest of this entry »

Posted in Poem | 1 Comment »

இருத்தினோம் இதயத்தில் உம்மை…

Posted by Kattankudi Web Community (KWC) on 11/01/2012

-மதியன்பன்-

இம்முறை நடைபெற்ற கல்விப்; பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி வெற்றி பெற்று பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான காத்தான்குடி மாணவர்களை வாழ்த்தி எழுதப்பட்ட கவிதை. Read the rest of this entry »

Posted in Poem | 1 Comment »

மழையது ஓய்ந்த தென்று…

Posted by Kattankudi Web Community (KWC) on 08/01/2012

-மதியன்பன்-

மழையது ஓய்ந்த தென்று
மகிழ்விலே நாங்க ளெல்லாம்
திளைத்துமே இருந்த வேளை
திரும்பவும் பெய்யும் மழையால்
முளைத்திடும் நுளம்பு மற்றும்
முடிவிலா நோய்கள் தன்னால்
Read the rest of this entry »

Posted in Poem | 1 Comment »

மழை நோய்

Posted by Kattankudi Web Community (KWC) on 05/01/2012

- காத்தான்குடி அனு -

மழையது நின்று போச்சு

மாரியும் விலக லாச்சு

நோய்களே தொற்றி யாச்சு

நுளம்புகள் பெருக்க மாச்சு

Read the rest of this entry »

Posted in Poem | 1 Comment »

புரண்டு போன பூமி.

Posted by Kattankudi Web Community (KWC) on 04/01/2012

-முஹமட் பஸ்ஹான்-

அன்று,
உழைப்பவனின் உழைப்பை
மதிப்பிடத்தான்
பணம்.

Read the rest of this entry »

Posted in Poem | 1 Comment »

கல்வி அமைச்சரே! உங்களுக்கென்ன ஆச்சி..?

Posted by Kattankudi Web Community (KWC) on 03/01/2012

-காத்தான்குடி மதியன்பன்-

பரீட்சைப் பெறுபேற்றில் குழப்பம்!
படித்தவர்க்கும் புரியவில்லை விளப்பம்!
பாவிகளோ செய்த பிழை -
பார்த்திடவோ யாருமிலை -
படித்தாலும் எதிர் காலம் கலக்கம்!

Read the rest of this entry »

Posted in Poem | 1 Comment »

ஏனிந்தப் பேரவலம்

Posted by Kattankudi Web Community (KWC) on 30/12/2011

-காத்தான்குடி அனு-

பால்வத்தை ஓடையோரம் வீடு
படுகின்றோம் நாம்பெரிய பாடு
கால்வாயில் பாய்ந்துவரும் வெள்ளம்
கரைபுரள நாசம்தான் இல்லம்

Read the rest of this entry »

Posted in Poem | Leave a Comment »

சோகம் தந்த சுனாமி

Posted by Kattankudi Web Community (KWC) on 25/12/2011

– மதியன்பன்-

பின்னோக்கிப் போனாயே பெருங்கடலே – விழி
பிதுங்காமல் வேடிக்கை பார்த்தோமே
முன்னோக்கிப் பாய்ந்தாயே மான்போலே – நாம்
மூழ்கிவிட்டோம் தண்ணீரில் மீன்போல

Read the rest of this entry »

Posted in Poem | 1 Comment »