பொறுப்பாளர்
காத்தான்குடி யாஹூ குறூப்ஸ்
அஸ்ஸலாமு அலைக்கும்
காத்தான்குடி வறிய மாணவர்களுக்கான உதவிக் கொடுப்பனவுத் திட்டம்.
எமதூரில்கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு சிறு உதவிக் கொடுப்பனவு திட்டம் ஒன்றை காத்தான்குடி யாஹூ குறூப்ஸ் ஊடாக ஏற்பாடு செய்வதற்கு ஆலோசனை ஒன்றை முன் வைக்கின்றேன். ஊரிலும் மற்றும் கடல் கடந்து வாழும் எம் சகோதர்களின் உதவியுடன் இத்திட்டத்தினை மேற்கொள்ள முடியும்.
இத்திட்டம் அரசியல், மார்க்க முரண்பாடுகள், பாடசாலை மற்றும் மஹல்லா என்பவற்றைத் தாண்டி பொது நோக்கம் கொண்ட உண்மையில் வறிய சிரார்களை நோக்கமாகக் கொண்டதாக அமைய வேண்டும். ஆகக்குறைந்தது அவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள், கொப்பிகள் மற்றும் தனியார் வகுப்புக்களுக்கு வழங்கும் கட்டணங்களை ஓரளவுக்காவது பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கவேண்டும்.
இத்திட்டம் பற்றிய கருத்துக்களையும் கொடுப்பனவுகள் மாதாந்தம், காலாண்டு அல்லது வருடாந்தம் எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றிய ஆலோசனைகளையும் யாஹூ குறூப்ஸ் பொறுப்பாளர் மற்றும் அங்கத்தவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன்.
நன்றி
அன்புடன்
எம். முகம்மட் ஜலீஸ் -UK