இரவோடு இரவாக டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு
Posted by Kattankudi Web Community on 23/02/2013
உடன் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் இரவோடு இரவாக எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. அதன்படி 90 ஒக்டெயின் பெற்றோல் ஒரு லீட்டர் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 162 ரூபாவாகும்.
95 ஒக்டெயின் பெற்றோல் ஒரு லீட்டர் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 170 ரூபாவாகும். ஆட்டோ டீசல் ஒரு லீட்டர் 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 121 ரூபாவாகும். சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 145 ரூபாவாகும். மேலும் மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் 111 ரூபாவில் இருந்து 115 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.








arif Hssan Doha said
very good Srilankan very luck Penelope