மாடு வாங்கச் சென்றவர் மாரடைப்பினால் மரணம் !
Posted by Kattankudi Web Community on 12/02/2013
மாடுவாங்கச் சென்றவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் மரணித்த சம்பவம் நேற்று (11.02.2013) மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய புல்லுமலையில் இடம் பெற்றுள்ளது. கல்முனை நற்பிட்டிமுனை ஜும்மாப் பள்ளி வீதியைச் சேர்ந்த பக்கீர்த்தம்பி ஹச்சி முஹம்மது (வயது 40) என்ற நபரே இவ்வாறு இறந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் பெரிய புல்லுமலையிலிருந்து நற்பிட்டிமுனை திரும்புவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த போததே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இறுதியாக கைப்பேசியில் தான் நெஞ்சுவலியால் அவதிப்படுவதாக அவரது மனைவியிடம் பேசியுள்ளார்.
சடலம் செங்கலடிப் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.








Meezan said
Innalillahi wa innna ilaihirajoouoon.
KWC.
Please dont publsh this type of news because other community waching it carefully and use for their anti-muslim propaganda.
muslim brother