இலங்கைக்கு ஆசி வேண்டி காத்தான்குடியில் துஆ பிராத்தனை
Posted by Kattankudi Web Community (KWC) on 01/02/2013
இலங்கைக்கு ஆசி வேண்டி இலங்கையின் சுதந்திர தினத்தையொட்டி காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும் ஆ பள்ளிவாயலில் பிராத்தனை வைபவமொன்று இன்று (1.2.2013) நடைபெற்றது.
இன்று ஜும் ஆ தொழுகையின் பின்னர் இந்த துஆ பிராத்தனை நடை பெற்றது.
இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத் மற்றும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது துஆ பிராத்தனையை காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி நடாத்தினார்.









win said
இலங்கைக்கு ஆசி வேண்டி பிரார்தனை நடத்தும் நாங்கள் பௌத்தர்களால் முஸ்லிம்களுக்கு அபகீர்தியும் அச்சுறுத்தலும் ஏற்படுத்தப்பட்ட போதும் பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்ட போதும் மௌனமாகி விடுகின்றோம் இதற்கும் அல்லாஹூவிடத்தில் கேள்வியுண்டு என்பதை மறக்கக் கூடாது அலியார் பலாஹி அவர்களே
Jaufar Mohd. Haneefa said
Please dont bring the politics to our holy places.