வீதி விபத்தில் காங்கேயனோடையை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு
Posted by Kattankudi Web Community (KWC) on 27/01/2013
காத்தான்குடி பொலீஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் சனிக்கிழமை (26.1.2013) மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் காங்கேயனோடையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காங்கேயனோடையிலிருந்து ஆரையம்பதி பிரதான வீதி ஊடாக காத்தான்குடிக்கு செல்வதற்காக துவிச்சக்கர வண்டியில் ஆரையம்பதி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக சென்ற மேற்படி வயோதிபருடன் மருதமுனையிலிருந்து வருகை தந்த கார் ஒன்று மோதுண்டதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் காங்கேயனோடையை சேர்ந்த இப்றாலெவ்வை முஸ்த்தபா லெவ்வை (65) என்பவர் ஸ்த்தளத்திலேயே உயிரிழந்ததாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.








Mohamed Imtiyas said
innalillahivainnailaihirajiuoon