நோலிமிட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துடன் எமக்கு சம்பந்தமில்லை: பொதுபலசேனா
Posted by Kattankudi Web Community (KWC) on 21/01/2013
நேற்றைய தினம் மஹரகம நகரில் மேற்கொள்ளப்பட்ட நோலிமிட் நிறுவனத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கும் தமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சில இனவாத இயக்கங்கள் தமது அமைப்பின் பெயரை இனவாதசெயற்பாடுகளுக்கு பயன்படுத்துகின்றன. இதன்மூலம் தமது அமைப்பின் பெயரை அவர்கள் நாசப்படுத்துகின்றனர். இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபடுவதில்லை. இனவாதத்தை ஒழித்து தமிழ் முஸ்லிம் மக்களுடன் சகோதரத்துவத்துடன் வாழும் சூழலொன்றை உருவாக்கவே நாம் பாடுபடுகிறோம் . எனவே முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான குறித்த நிறுவனத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் தமது அமைப்பின் பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கும் எமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். (விடிவெள்ளி)








Mohamed Irsath said
நம்பிட்டோம்…
PMAMF Mohammed H.I.R.A.Z said
பிள்ளையையும் கில்லி தொட்டிலையும் ஆட்டுர டெக்னலொஜி ரொம்ப பழசு கண்ணா???
fawas said
good comment