காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

மஹரகம நோலிமிட்டுக்குள் பொதுபலசேனா அத்துமீறல் : மூடுமாறும் ஆர்ப்பாட்டம்

Posted by Kattankudi Web Community (KWC) on 19/01/2013

Nolimitமஹரகம நோலிமிட் நிறுவனத்தின் முன்னாள் இன்று மாலை 4 மணியளவில் பொதுபலசேனா மற்றும் சிங்கள ராவய ஆகிய பெளத்த கடும்போக்கு அமைப்புக்களைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நிறுவனத்தை உடனடியாக மூடக்கொரியெ இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெளத்த பிக்குகள்  உள்ளடங்கிய குழுவினராலேயே குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது குறித்த ஆடையகத்தினுள் அத்துமீறி பெளத்த கடும்போக்காளர்கள் நுழைய முற்பட்ட போது  அங்கு பதற்ற நிலையொன்று ஏற்பட்டது. இதனை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் ஸ்தளத்துக்கு  வந்து பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி, அமைச்சர் ரிஷாட் பதுயுத்தீன் மற்றும் சட்டத்தரணி  அலி சப்ரி  ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(நன்றி: விடிவெள்ளி)

About these ads

4 Responses to “மஹரகம நோலிமிட்டுக்குள் பொதுபலசேனா அத்துமீறல் : மூடுமாறும் ஆர்ப்பாட்டம்”

  1. அண்மைக்காலமாக இந்த பொது பல சேனா அமைப்பின் அட்டகாசம் அதிகரித்திருப்பது கவலைப்பட வேண்டியதும் , சந்தேகப்பட வேண்டியதுமான விடயமாகும். பள்ளிவாயல்களில் தாக்குதல்களை நடாத்தி முஸ்லிம்களை அப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பது , சட்டக்கல்லூரி நுழைவுப்பரீட்சையில் முஸ்லிம் மாணவர்கள் திறமை காட்டியதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் , சட்டக்கல்லூரிக்கு உள்ளேயே நுழைந்து பதிவைப் பிற்படுத்தும் அளவுக்கு சக்தியை பயன்படுத்தியுள்ளமை , ஹலால் உணவுச்சான்றிதழ் இந்த நாட்டில் தேவையில்லை என்ற போராட்டம் , முஸ்லிம்களது வர்த்தக / வியாபார நிலையங்களுக்கு முன்னால் அல்லது உள்ளே புகுந்து ஆர்ப்பாட்டம் நடாத்தி அவற்றை அப்பிரதேசங்களில் இருந்து அகற்றுதல் , இதேபோல வெளியே தெரியாத பல விடயங்கள் இந்த நாட்டிலே நடக்கின்றன. இவ்வளவுக்கும் யுத்தமற்ற அமைதியான நாடு என்ற பெயர். இந்த வகையில்தான் NO LIMIT க்கு நுகர்வோரிடம் இருக்கும் செல்வாக்கை பொறுக்காதவர்கள் இதை இனரீதியாக நோக்கி இந்த குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறார்கள். இவ்வாறான விடயங்களை கட்டுப்படுத்த முடியாத அரச பாதுகாப்பு இருக்கின்றது என்பது முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகவும் அபாயகரமான எதிர்காலத்திற்குரிய அடையாளமாகும். இது சம்பந்தமாக அரசில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் “இது ஜனாதிபதிக்கு தெரியாமல் நடக்கிறது ” என்று சொல்கிறார்கள் . சரி, அதுதான் உண்மை என வைத்துக் கொள்வோமே! , இவ்வாறான விடயங்களை அவருக்குத் தெரியப்படுத்தி நியாயம் , பாதுகாப்பு பெற்றுத் தருவதற்காகத்தானே உங்களுக்கு அரசியல் அந்தஸ்தை மக்கள் தந்திருக்கிறார்கள்.
    மிகப்பலம் பொருந்திய நிலையில் இருந்து யாரென்று அடையாளம் தெரியாமல் மறைந்திருந்து தாக்கிய புலிகளை இந்த அரசாங்கத்திற்கு அழிக்க , கைது செய்ய முடிந்தது என்றால் நேரடியாக வந்து தொலைக்காட்சி கமெராக்களுக்கு முன்னால் நின்று வீரம் பேசும் இந்த பல சேனாவினருக்கு எதிரான நடவடிக்கைகளை , அப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லை குறைந்தது கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையாவது செய்ய முடியாதா? இதே போல முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள பௌத்தர்களுக்கு முஸ்லிம்களால் ஆபத்து ஏற்பட்டிருந்தால் இவ்வாறுதான் கண்டும் காணாமல் இருந்திருப்பார்களா! இப்போது வீரத்தைக் காட்டும் பல சேனாவினர் புலிகள் இருந்த காலத்தில் வடக்குக்குச் சென்று வீரத்தைக் காட்டி இருக்கலாமே?
    அவர்கள் தொடர்ந்து இவ்வாறுதான் நடப்பார்கள் , ஆரம்பத்தில் தங்களை அடையாளம் காட்டப் பயந்தவர்கள் , இப்போது வெளிப்படையாக இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால்தான் தமக்கு மதிப்பு என்று எண்ணும் அளவிற்கு அவர்களுக்குரிய வாய்ப்பு இருப்பதை உணர்ந்து விட்டார்கள் , எனவே இது மென்மேலும் பெருகி பாரிய கலவரமாக மாறுவதை தடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துடன் உள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கே உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்

  2. அபுல் காக்கா said

    முதலில் கடைக்கு வெளியே நடந்தாலும் போலீசாரால் உள்ளே வரும் வரை எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்பட வில்லை, மற்றும் ஆர்பாட்ட காரர்களால் நோ லிமிட் நிருவாகித்தினரை சந்திக்க வேண்டு என்று கோரிக்கை விடுக்க பட்டுள்ளது, அவர்களுடன் கதைபதட்கு ஒன்ன்றும் இல்லை என்று நிறுவாகத்தினர் கூற, ஆர்பாட்ட காரர்களால் கடை எரியூட்டப்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை என்று கூறிச்சென்றது மிகவும் ஒரு பக்க சார்பான விடயமாக காணப்படுகின்றது….

  3. Mohamed Irsath said

    ஆட்சி மாற வேண்டும்.. முஸ்லிம் அமைச்சர்கள் எல்லாம் அரசாங்கத்தின் வளர்ப்பு பிள்ளைகள் இவர்கள் முஸ்லிம்களுக்கு எதுவும் பண்ணவும் மாட்டார்கள், பேசவும் மாட்டார்கள்

    • டீ மரைக்கார் said

      D.MIN.Hisbullah avarkale ithu unkalin kavanaththitku!!!!!!!!!!!!!!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,316 other followers

%d bloggers like this: