காத்தான்குடி கெக்குழு கழக மாணவியர் தேசிய மட்டப் போட்டிகளில் சாதனை
Posted by Kattankudi Web Community (KWC) on 19/02/2012
- எம்.ஏ.சீ.எம். ஜெலீஸ் -
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் கெக்குழு சிறுவர் கழகங்களைச் சேர்ந்த மாணவிகள் தேசிய மட்டப் போட்டிகளில் முதலாமிடங்களைப் பெற்றுள்ளனர்.
ஹிழுறியா வித்தியாலயத்தினைச் சேர்ந்த எம்.ஜெ.எப். ஜஸ்லா, அல் அமீன் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஏ.பீ. அப்ஹா ஆகியொர் சிறுகதை போட்டியில் முதலாம் இடத்தினையும், ஹிழுறியா வித்தியாலயத்தினைச் சேர்ந்த எம்.ஏ. அஸ்ஹா றிஹாமா அறிவிப்பு போட்டியில் முதலாம் இடத்தினையும், மீராபாலிகா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ரீ.எப். சாஜிதா அறிவிபப்புப் போட்டியில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.
இவர்கள் பிரதேச மாவட்ட மாகாண போட்டிகளில் பங்குபற்றி தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்று தமது பாடசாலைக்கும் சமூகத்திற்கும் நன்மதிப்பை பெற்றுக் கொடுத்துள்ளனர்.







abuathnan said
அல்ஹம்துலில்லாஹ்!
வெற்றி பெற்ற மணாவச் செல்வங்களுக்கும்
நெறிப்படுத்திய ஆசிரியப் பெருந்தகைகளுக்
கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!