உன்னிச்சை உறுகாமம் குளங்களின் வான்கதவுகள் திறப்பால் பல இடங்களில் வெள்ளம்
Posted by Kattankudi Web Community (KWC) on 17/02/2012
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகப்பெரிய நீர்ப்பாசனக்குளங்களான உன்சிச்சை மற்றும் உறுகாமம் குளங்களின் வான்கதவுகள் இன்று மாலை திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இக்குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கிரான் பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மகிழவெட்டுவான் பாலம்மடு சிவத்தபாலம் சின்னப்புச்சேனை சித்தான்டி உப்போடை உள்ளிட்ட பல இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.







