பிரதியமைச்சர் பஷீர் சேஹுதாவூத் இந்தியாவில் உரையாற்றினார்
Posted by Kattankudi Web Community on 03/02/2012
கடந்த 29ம் திகதி இந்தியா சென்றிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் 30.1.2012 திங்கட்கிழமையன்று இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள கல்கிட் பகுதயில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதில் உலகின் பல நாடுகளிலிருந்தும் இஸ்லாமிய அறிஞர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த மாநாட்டில் ஒரு இலசட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது இலங்கை முஸ்லிம்களின் நிலவரம் தொடர்பாக பிரதியமைச்சர் பசீர் ஷேகுதாவூத் உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் பிரதியமைச்சருடன் இலங்கை இந்திய வர்த்தக கூட்டமைப்பின் பிரதி தலைவர் எம்.எஸ்.சாபியும் கலந்து கொண்டார் என பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூதின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
This slideshow requires JavaScript.







