USAID உதவியுடன் மட்டக்களப்பில் இலவச கணினிப் பயிற்சி நெறி
Posted by Kattankudi Web Community (KWC) on 02/02/2012
மண்முனைப்பற்று பிரதேச சபையில் ஐக்கிய அமெரிக்கா அபிவிருத்தி திட்டமான USAID நிறுவனத்தின் உதவியுடன் இயங்கி வரும் சிநேகமான இளைஞர் நிலையத்தில் நேற்று (01.02.2012) கணணி இலவச பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்முனைப்பற்று பிரதேச சபையினால் செயற்படுத்தப்பட்டு வரும் இந்த நிலையத்தின் கணணிப் பயிற்சி நெறியின் ஆரம்ப வைபவத்தில் USAID நிறுவனத்தின் அதிகாரி ஜோன் கென்ட், இந்த திட்டத்தின் அதிகாரி கிளஸ்பியா, மண்முனைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி கிறிஸ்டினா சசிகரன், உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் அதன் செயலாளர் மற்றும் அதிகாரிகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சிநேக இளைஞர் நிலையத்தினுடாக சமாதானத்தை கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ் USAID நிறுவனத்தின் உதவியுடன் பல் வேறு பாடநெறிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த நிலையத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள ஊடற்பயிற்சி நிலையத்தினையும் இவ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
This slideshow requires JavaScript.







