இலங்கையிலுள்ள நோர்வே நாட்டுத்தூதுவர் மட்டக்களப்பு விஜயம்
Posted by Kattankudi Web Community on 24/01/2012
இலங்கையிலுள்ள நோர்வே நாட்டுத்தூதுவர் மில்டி கரஸ்டட் இன்று(24.1.2012)காலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்து மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரனை சந்தித்தார்.
இச்சந்திப்பு மட்டக்களப்பு மாநகர சபையிலுள்ள மாநகர மேயர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பின் போது மட்டக்களப்பு மாநகர சபையின் வேலைத்திட்டம் மற்றும் மாநகரத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மட்டக்களப்பின் தற்போதய நிலைமை தொடர்பாகவும் நோர்வே தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.
இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஏ.ஜோர்ஜ் பிள்ளை, ஆணையாளர் கே.சிவநாதன் உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
This slideshow requires JavaScript.







