காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

மழை நோய்

Posted by Kattankudi Web Community (KWC) on 05/01/2012

- காத்தான்குடி அனு -

மழையது நின்று போச்சு

மாரியும் விலக லாச்சு

நோய்களே தொற்றி யாச்சு

நுளம்புகள் பெருக்க மாச்சு

.

உயிரினை டெங்கு கொல்லும்

ஊரெலாம் பரவிச் செல்லும்

சூழலில் வேண்டும் சுத்தம்

சுணங்கினால் நுளம்பு குத்தும்

.

வைரசும் தொற்று நோயே

வந்திடின் வாழ்வு தீயே

தேங்கிநீர் நின்றால் நஞ்சு

தெளிவினை கேட்டு அஞ்சு

.

வாந்தி பேதிகளால் மரணம்

வருவதில் விழிப்பு பெறணும்

வீடு வாசல்கள் சுத்தம்

விளங்கிட வேண்டும் நித்தம்

.

மழையது விட்ட பின்னால்

வருவது பிணிகள் முன்னால்

வருவதன் முன்னே காத்து

வளமது பெறுவோம் பார்த்து

.

குப்பையை கொளுத்தி வைப்போம்

கொதித்தநீர் ஆற்றிக் குடிப்போம்

செல்வமில் சிறப்பு சுகமே

சுகமதே எமக்கு இகமே

One Response to “மழை நோய்”

  1. எளிமையான அருமையான வரிகள்.
    காலத்துக்கேற்ற வரிகளும் கூட.
    நல்லதொரு கவிதை
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s