சத்திய சேவகர் வேண்டும்
Posted by Kattankudi Web Community on 19/10/2011
வீட்டுச்சிறையில்
விடுதலை வேண்டி
விரக்தியில் நிரம்பி
வாழ்வின் விழிப்பில்
வாழும் -நம்
விதவையர்க்குதவ
சேவகர் வேண்டும் !
-0-
கோடையிற்
சருகிய பயிராய்
பாவம்-
முப்பது கடந்தும்-
மணங்கான –நம்
மங்கையர்க்குதவ
சேவகர் வேண்டும்
-0-
குட்டி மகள்
சட்டைச் சண்டையிலே
வட்டிக்கு பணமெடுக்க
வங்கிக்கோடும்
வறியவர்க்குதவ
வள்ளல்
சேவகர் வேண்டும் !
-0-
கானல்கள் வேண்டாம்
கதவுகள் தட்டும்
உண்மைக்
கல்புகள் வேண்டும்
-0-








Mohideen Saly said
விதவைகள் வாழ்வில்
விளக்கேற்ற நினைக்கும்
உங்களின் கவிதை
அவர்களின் வாழ்வை
சிறப்புற வைக்கும்
என்ற நம்பிக்கையுடன்….