காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

மர்ம மனிதர்கள்:பாழடைந்த வீட்டினுள் பொலிஸாரின் சீருடைகள், தொப்பிகள், காலணிகள் மீட்பு

Posted by Kattankudi Web Community (KWC) on 13/08/2011

பொத்துவில் பாக்கியவத்தை பகுதியில் நேற்று மர்மமனிதர்களின் நடமாட்டத்தால் பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பாக்கியவத்தை பகுதியில் உள்ள சில வீடுகளை நேற்று இரவு 11 மணியளவில் மர்மனிதர்கள் தட்டியுள்ளனர். இதனையடுத்து பிரதேச மக்கள் இரண்டு மர்ம மனிதர்களையும் துரத்தி சென்ற போது இடைநடுவே இருந்து மேலும் இரண்டு மர்ம மனிதர்கள் இவர்களுடன் இணைந்து ஓடியுள்ளனர்.

இதனையடுத்து நான்கு மர்ம மனிதர்களும் குறித்த பிரதேசத்தில் இருந்த பாழடைந்த வீடொன்றினுள் புகுந்துள்ளனர். எனினும் மர்ம மனிதர்கள் வசம் துப்பாக்கி காணப்பட்டதால் பிரதேச மக்கள் அவர்களை நெருங்க வில்லை. இதனையடுத்து அங்கு ஒளிந்திருந்த மர்மமனிதர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் குறித்த பாழடைந்த வீட்டினுள் சென்ற பிரதேசமக்கள் அங்கு பொலிஸாரின் சீருடைகள், தொப்பிகள், காலணிகள், அடையாள அட்டையின் பிரதிகள், மற்றும் பாஸ்போர்ட் பிரதிகள், ஆடைகள், தேர்தல் இடாப்பு கோப்பு, கத்தி முதலான பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்தையடுத்து அரை மணிநேரத்தின் பின் குறித்த இடத்திற்கு வந்த பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு பின் அது கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதோடு பொலிஸ் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து பொத்துவில் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, பிரதேசத்தில் தற்போது சுமூகநிலை ஏற்பட்டுள்ளதாக கூறி தொடர்பினை துண்டித்து விட்டனர்.

நன்றி – செய்தி மற்றும் புகைப்படம் வீரகேசரி

This slideshow requires JavaScript.

4 Responses to “மர்ம மனிதர்கள்:பாழடைந்த வீட்டினுள் பொலிஸாரின் சீருடைகள், தொப்பிகள், காலணிகள் மீட்பு”

  1. …………………………………………………………………………. .ஆனா இப்ப தமிழ் முஸ்லிம் பெண்களின் மானம் ஊசல் ஆடுது.இதுதான் இன்றய நிலை .

  2. Mazaa said

    இது போன்ற நிகழ்வுகளைப் பார்க்கின்றபோது – பாதுகாப்பு படையினரை சந்தேகிப்பதா..? அல்லது பாதுகாப்பு படையினரை நோக்கி மக்களின் வெறுப்பை திசை திருப்ப நினைக்கும் – ஒரு கும்பலின் சதி முயற்சியா..? என்பதுதான் இன்னமும் பரியாத புதிராகவே இருக்கின்றது.

  3. sri boss said

    இது
    01. நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி அவசரகால சட்டங்களை நீடிப்பதற்காகவா?
    02. இதனை காரணம் காட்டி மூடப்பட்ட இராணுவ முகாம்களை மீண்டும் திறக்கவா?
    03. மக்களை குழப்பதிலாழ்த்தி மக்களின் மனநிலையை திசை திருப்புவதுடன் வெளி நாடுகளையும் தற்போதைய இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் இருந்து திசை திருப்பவா?
    04. மந்திரம் தந்திரங்களில் அதிக நாட்டமுள்ள இந்த அரசாங்கம் அவர்களின் நலனுக்காக ஏதும் புதையல் எடுக்கவா என இச் செயற்பாடுகள் சிந்திக்க வைத்துள்ளன.

  4. who is that black sheep !!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s