இடைநிலைப் பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக ஆசிரியர்களுக்கான ஒரு நாள் வலுவூட்டல் பயிற்சி செயலமர்வு
Posted by Kattankudi Web Community on 19/06/2011
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மஹிந்த சிந்தனையின் 1000பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடராக, அனுபவத்தினை மூலமாகக் கொண்ட சமுகத்திற்கான கல்வி செயற்திட்டத்தின் கீழ் இடைநிலைப் பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக ஆசிரியர்களுக்கான ஒரு நாள் வலுவூட்டல் பயிற்சி செயலமர்வு 18.06.2011 சனிக்கிழமை கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் எம்.ஏ.சீ.எம். பதுர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் DLC நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் குமாரசிரி, கிழக்கு மாகாண திட்ட பணிப்பாளர் கலாநிதி, பசரை தமிழ் மகா வித்தியாலய அதிபர் ஆறுமுகம், காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.சுபையிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேற்படி 1000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் DLC இனது வழிகாட்டலுடன் மட்டக்களப்பு மத்தி வலயத்தின் முதலாவது பாடசாலையாக அல்ஹிறா மகா வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டு பாடசாலையிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் குறித்த நேரத்திற்குள் அலுப்பிள்ளாமல் கற்றல் கற்பித்தல் தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
This slideshow requires JavaScript.







