காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

கொலையுண்டு புதைக்கப்பட்டவர் சட்டரீதியாக இனம் காணப்பட்டார் – படம் இணைப்பு, புதைக்கப்பட்ட இடத்தின் காணொளி இணைப்பு (3rd Update)

Posted by kattankudi web site on 18/05/2011

-அபூ றப்தான்-

காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஏ.எல்.எஸ்.மாவத்தையிலுள்ள வீட்டு வளவொன்றுக்குள் புதைக்கப்பட்ட சடலம் செய்யது புகாரி றிஸ்வியா (27) எனும் பெண்ணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இன்று காலை மட்டக்களப்பு நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் அப்துர்ரஹ்மான் ஏனைய பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் சடலம் தோண்டப்பட்டது.

பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட சடலம் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏராளமான பொது மக்கள் இந்த சம்பவத்தை நேரில் பார்த்துக்கொண்டிருந்தனர்.

சடலம் உறவினர்களுக்கு வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்படவிருக்கின்றது.

This slideshow requires JavaScript.

31 Responses to “கொலையுண்டு புதைக்கப்பட்டவர் சட்டரீதியாக இனம் காணப்பட்டார் – படம் இணைப்பு, புதைக்கப்பட்ட இடத்தின் காணொளி இணைப்பு (3rd Update)”

  1. I@H said

    தயவு செய்து இணையத்தள சகோதரர்களுக்கு கொலையாளியின் புகைப்படத்தை காண்பிக்கவும்.

  2. abdullah said

    மௌலவியா மிக நல்லவர் அவரின் தந்தையும் மரணித்து விட்டார் . அவரின் சகோதரனும் தொன்நுராம் ஆண்டு கடத்தப்பட்டு விட்டார் எனவே இவர்ஹளுக்கு ஆண் துணை இல்லை மிகவும் கஸ்ட்டப்பட்டவர் அவரின் ஜனநாஷா விடயத்தில் வசதி படைதவர்கள் உதவினால் மிகவும் நல்லது ஜெசகள்ளஹு ஹைரா
    (அவரின் மாணவன் )

    • ismail said

      your comments is ok but small amendment
      her father is not expired he is still live in kattankudy

  3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். இந்த கொலையை அவர்தான் செய்திருப்பாரேயானால் இது போன்ற அயோக்கியர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். அதேநேரத்தில் காவல்த்துறை இந்த வழக்கை சரியாக விசாரிக்க வேண்டும். அவசரகோலத்தில் வழக்கை முடிக்க வேண்டும் எனபதற்காக குற்றம் புறியாதவர்களை தண்டணைக்கு உள்ளாக்கிவிடக்கூடாது

  4. Abdul Majeeth said

    Take action against killer.

  5. suthaa said

    தயவு செய்து இணையத்தள சகோதரர்களுக்கு கொலையாளியின் புகைப்படத்தை காண்பிக்கவும்.

  6. wais said

    This is Happen in Kattankudy ???
    unbelievable!!!!!

    thanks kattankudi info

  7. fahim said

    Nanmayum Theemayum Avanin nattapadiye Nadakkinrana.
    Porumaiyalathaludan Iraivan Irukkinran. (Kuran)

  8. mafaz said

    இன்னும் இவ்வாறு நடக்காமல் இறைவன்தான் காப்பாற்ற வேண்டும் அல்லாஹு அக்பர்

  9. jaliyath said

    la hawla walaa kuwwatha illa billah

  10. Abu Aayisha said

    Inna lillahi va innaa ilaihi raajioon.Aarampa kaalathil ivarhal miha ganniyamaaha vaalndavarhal,ivarin sahoathararai kadathiya pinnar avarhalin vaalkai miha kastamaahivittathu,inda vidayam keatkavum mihavum kavalayaah irukindrathu,Allah anda pennuku suvanathai koduka anaivarum dua seivoamaaha.

  11. abunana said

    yaa allah neethaan yaavarrayum arinthavan

  12. Sajith said

    தயவு செய்து கொலையாளியின் புகைபடத்தை பிரசுரிக்கவும். அதேசமயம் இப்பெடியான சம்பவங்கள் இனிமேல் நடக்கதவாறு அவருக்கு தண்டனை வழங்க வேண்டும். போலீசார் காலம் கடத்தாமல் விரைவாக தண்டனை வழங்க வேண்டும் . மரணித்தவரின் பாவங்கள் மன்னிக்கப்பட அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமின் …….

  13. ifras said

    ya allah nee than antha pennin pavathai mannithu suwarkam nulaya valivahupayaha
    melum intha maranamanathu penkalai thunburuthum kanavan marku padamaha amayatum

  14. nawsath said

    death penalty! punishment makes others fear who practice in near future. killer must be killed.

  15. samyan said

    AVARHALUKKU ALLAH SUWARKATHTHI VALANGUVANAHA…………….!

  16. SAM. Ashraf said

    யா அல்லாஹ்! இந்த ஜனாஸாவின் கப்ர் வாழ்க்கையினை சுவர்க்கப் பூஞ்சோலையாக கொடுப்பாயாக! யா அல்லாஹ் இந்த ஜனாஸாவினால் எத்தனையோ குர்ஆனை மனனம் செய்த மாணவர்களை உருவாகக் காரணமாக இருந்திருக்கின்றார். யா அல்லாஹ்!இந்த ஜனாஸாவினால் யார் யார் எல்லாம் பயனடைந்தார்களோ!, யார் யார் எல்லாம் குர்ஆனை மனனம் செய்தார்களோ, அவர்களினால் செய்யப் படுகின்ற நற்காரியங்களின் பலனை இந்த ஜனாஸாவுக்கும் வழங்குவாயாக!

    யா அல்லாஹ் இந்த ஜனாஸாவின் குடும்பத்தினர் மிகவும் மீள முடியாத துயரில் நிச்சயம் இருப்பார்கள். யா அல்லாஹ் அவர்களின் மன வேதனை, துயரத்தினை குறைத்து, அவர்களுக்கு சாந்தத்தினை, அமைதியினை கொடுப்பாயாக! யா அல்லாஹ் இந்த ஜனாஸாவின் கொலைக்கு காரணமாக இருந்த, எமது முஸ்லிம் சமூகத்தின் தலை குனிவுக்கு காரணமாக இருந்த அந்த குற்றவாளியை சமூகத்திற்கு இணங்காட்டுவாயாக! அக்குற்றவாளிக்கு நீயே தண்டனை வழங்குவதில் நியாயமானவன். அதற்குறிய தண்டனையினை விரைவில் கொடுப்பாயாக! யா அல்லாஹ் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக!

    ஒரு சிறந்த குர்ஆன் ஆசிரியையாகவும், ஒரு மரியாதைக்குரிய பெண் என்ற வகையிலும் இந்த பெண் மற்றும் குடும்பத்தின் சூழ் நிலை அறிவேன். இந்த ஜனாஸாவின் குடும்பத்திற்கு முடியுமானவர்கள் அல்லாஹ்வின் நற்பொருத்தத்தினை மட்டும் நாடி சிறு தொகைப் பணத்தையேயும் முடியுமானவர்கள் வழங்கும் பட்சத்தில் ஜனாஸா நல்லடக்கம், மற்றும் ஏனைய செலவுகளுக்கு உதவியாக இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து…

    தயவு செய்து இக்குடும்பத்தின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகள் ஏதாவது கிடைத்தால் உடனடியாக வெளியிடுமாறு காத்தான்குடி இன்போவினை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றேன். முடியுமான சகோதரர்கள் மற்றும் இந்த ஜனாஸாவின் மூலமாக உருவாகி மாணவர்களின் சிறு தொகைப் பணங்கள் என்றாலும் இவ் ஜனாஸாவின் குடும்பத்திற்ன தற்காலக செலவுகளை பூர்த்தி செய்ய உதவியாக அமையலாம். தயவு செய்து முடியுமானால் விரைவில் வங்கிக் கணக்கு இலக்கம் ஒன்றினை வெளியிடுவீர்கள் என நம்புகின்றோம்.

  17. mhm said

    இப்படி எவ்வளவு குடும்பங்கள் காத்தான்குடியில் இருக்குதுக

  18. ASMIN said

    y this happen?

  19. Shukry said

    தயவு செய்து இணையத்தள சகோதரர்களுக்கு கொலையாளியின் புகைப்படத்தை காண்பிக்கவும்.

  20. K.T.R said

    இப்படி பட்ட கொலையாளிக்கு மக்கள் முன் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் .

  21. imthiyas said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

  22. ahsan noon said

    தயவு செய்து இணையத்தள சகோதரர்களுக்கு கொலையாளியின் புகைப்படத்தை காண்பிக்கவும்.

    இப்படி பட்ட கொலையாளிக்கு மக்கள் முன் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் .

  23. Shukry said

    இவனை மக்கள் முன் வைத்து கல் எரிந்து கொள்ள வேன்டும்…

  24. rigafh said

    இப்படி பட்ட கொலையாளிக்கு மக்கள் முன் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் .
    nichayamaa haa allah thandanai kodupanaa insah allah!!!!

  25. KKY said

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    அன்புள்ள வாசகர்களுக்கும், காத்தான்குடியின்
    சமூகத் தலைவர்களுக்கும், பொரு மக்களுக்கும்!

    இந்த வாரம் எமது காத்தான்குடியில் நடைபெற்ற மிகவும் மோசமான, படு கேவலமான ஓர் நிகழ்வே ஓர் அவலப் பெண்னின் கொலைச் சம்பவமாகும். காத்தான்குடி வரலாற்றில் அழிக்கப்படாத ஓர் கரை படிந்த சம்பவமாகவே அனைவராலும் இச்சம்பவம் பார்க்கப்படுகின்றது. இதனை சாதாரனமாக ஏதோ ஓர் பெண் மெனத்தாகி விட்டார் என்று விட்டு விட முடியாது. ஏனெனில், நாளை இதே சம்பவம் உங்களது, மகளுக்கோ, மருமகளுக்கோ வராது என்று என்பது நிச்சமில்லை. தயவு செய்து இந்த கொலை சம்பவமே காத்தான்குடியின் வரலாற்றில் கடைசியாக இருக்க வேண்டும் என்பது மிகவும் பணிவானம், கண்டிப்பானதுமான வேண்டுகோலாகும். இந்த சம்பவத்தினை கேள்விப்பட்டோ, வாசித்து விட்டோ மனவேதனைப் பட்டுவிட்டு நான்கு, ஐந்து நாட்களினால் நாம் மறந்து போகலாம். ஆனால், இந்த இழப்பின் வெற்றிடம் அந்தப் பெண்ணின் தாய், சகோதர, சகோதரிகளுக்கும், குடும்பத்தினருக்கும் தான் இதன் உண்மையான, ஆற்ற முடியாத வலியும், வேதனையும் அவர்கள் இந்த உலகில் வாழும் காலம் வரை இருக்கும்.

    இந்த விடயத்தில் நிறையப் படிப்பினைகள் இருக்கின்றன. ஊர்த் தலைவர்கள், காதிமார் போன்றவர்கள் இதில் மிகவும் கரிசனையுடன் செயற்பட வேண்டும். இங்கு நடைபெற்றுள்ளது சாதாரனமான பேச்சோ, சிறிய முரன்பாடோ இல்லை. ஓர் உயிர் கொலை செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட படுமோசமான விடயங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்கு ஊர்த்தலைவர்கள் மிகவும் கண்டிப்பான முடிவுகளை, தீர்வுகளை கொண்டு வந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
    இப்படிப்பட்ட விடயங்களை கவனிக்க முடியாதவர்களுக்கு சம்மேளனத்திலோ, ஜம்இய்யதுல் உலமாவிலோ தாங்களும் ஊர்த் தலைவர்கள் என்று மார்பு தட்டிக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தயவு செய்து விவாதம் புரிந்து கொண்டு தான் பெரியவன், நீங்கள் பெரியவன் என்று இருக்க தேவை இல்லை. சுரியான முடிவு எடுக்க முடியவில்லையானால் நீங்கள் சமூகத்திற்கு தேவையில்லை. வீட்டில் போய் உட்கார்ந்து கொள்வது மிகவும் சிறந்தது. மக்களுக்காகத் தான் சம்மேளனமோ, ஜம்இய்யதுல் உலமாவோ, நல்லிணக்க சபையோ, காதி நீதி மன்றமோ தவிர, இவைகளுக்காக மக்கள் அல்ல.!!!

    இந்தக் கொலையில் இன்னுமொரு முக்கிய தவரு விடப்பட்டுள்ளது. இந்தப் பெண் திருமணம் செய்த இரண்டோ மூன்று வருடங்கள் தான். ஆனால், அந்த முழு நாட்களும் இந்தப் பெண் அடி, காயம் என்று தொடர்த்தேட்சியாக வேதனையினையினையே அனுபவித்து வந்துள்ளார். இந்தப் பெண் மௌத்தாகும் போது வயிற்றில் ஐந்து மாதக் கற்பினியாக வபாத்தக்கப் பட்டுள்ளார். ஆனால், இதற்கு முன்பு இரண்டு தடைவ கற்பம் தரித்து இந்த கணவனினால் அடித்தே முன்னைய இரண்டு குழந்தைகளும் கலைக்கப்பட்டுள்ளன. இதன் உச்சக் கட்டமாக காதி நீதிமன்றத்திற்கு போய் காதியார் மிக அண்மையில் மீண்டும் இருவரும் வாழட்டும் என சேர்த்து வைத்துள்ளார். இப்படி தொடர்ச்சியான வேதனைகளை அணுபவித்து வருவதை விட, இப்படி அனியாயமாக கொலை செய்யப்படுவதனை விட இப்படிப் பட்ட பெண்கள் வாழ்க்கை இழந்து தாயிடமே வாழட்டுமே, ஏன் இந்த பாரிதாபமான நிலையில், உயிரினை இழக்க வேண்டு. தயவு செய்து காதி நீதிபதி இது போன்ற திருமணப் பிரச்சினைகளை மிகவும் கவனமாக ஆராந்து முடிவு எடுக்க வேண்டியது கட்டாயமானது.

    மேலும், திருமணம் முடிப்பதே கணவன், மனைவி பரஸ்பரம் விட்டுக் கொடுத்து ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழ்க்கையினை கொண்டு போவதற்கே திருமணம் என்ற அந்த உயர்ந்த பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. எமது மார்கக்த்தில் கணவன், மனைவியின் கடமைகள், பொறுப்புகள் மிகவும் தெளிவாக வரையருக்கப்பட்டுள்ளது. கணவனின் கடமை தனது மனைவிக்கு உணவு, உடை, உறையுள் போன்றவற்றை தனது வருமானத்திற்கு ஏற்றது போல் கொடுத்து மணைவியினை சந்தோசமாக வாழ வைப்பதே! ஆகக் குறைந்தது ஒரு வாய்ச் உணவு கொடுக்க முடியாத ஒருவனுக்கு எதுக்கு மனைவி, பிள்ளைகள்…? தேவையே இல்லை. அநியாயமாக திருமணம் என்ற பெயரில் எமது ஏழைச் சகோதரிகளின் வாழ்க்கையில் வேதனையினையும், கஸ்டத்தினையும், உயிரிழப்புக்களையும் அல்லாஹ்வுக்காக ஏற்படுத்தாதீர்கள்.

    இதில் இன்னுமொரு முக்கிய விடயம் அவதானிக் வேண்டியுள்ளது. சீதனம் இல்லாமல் தனது மகளை, தனது சகோதரியினை திருமணம் செய்துள்ளார், வாடகை வீட்டில் கொண்டு போய் வைத்துள்ளார். மிகவும் நல்லவர் என்றெல்லாம் மார்பு தட்டிக் கொள்ளாமல், உரிய முறையில் விசாரித்து தமது மகள்மார்களை, தமது சகோதரிகளை திருமணம் செய்து கொடுங்கள். திருமணம் முடிந்த பின் கூட அவர்கள் வாழ்வில் பிரச்சினைகள் வருகின்றதா, அதற்கான தீர்வுகளை முன்வைத்து பெண்கள் மீதும் மிகவும் கவனமாக இருங்கள். நாளை இதே கொலைச் சம்பவத்திற்கு தனது மகள் அல்லது தனது சகோதரி முகங்கொடுக்க நேரிட முடியாது எனக் கூற முடியாது. எனினும், இவனைப் போன்ற ஒரு சிலரைத் தவிர அதிகமான கணவன்மார் தமது மனைவியினை அல்லாஹ்வுக்காக, சீதனம் எடுக்காமல் திருமணம் செய்து மிகவும் சந்தோசமாக வாழ்க்கையினை கொண்டு செல்கின்றார்கள்.

    இந்த ஜனாஸாவின் மூலமாக நாம் இது போன்ற அதிகமான படிப்பினைகளினை பெறுவதாகவும், தமது பெண் பிள்ளைகளின் உயிர், மானம் போன்ற விடயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

    யா அல்லாஹ் கொலை செய்யப்பட்ட இந்த ஜனாஸாவின் பாவங்களை மன்னித்து, ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் உனது மிக உயர்ந்த பெறுமிதியான சுவகபதியினை வழங்குவாயாக!
    ஆமீன் ஆமீன் ஆமீன்
    யா ராப்பல் ஆலமீன்!

    • aliyar said

      ரொம்ப நன்றி மன… மிக முக்கியன பல விசயங்கள நேரமெடுத்து எழுதியிருக்காய்… உன்ட நல்ல நோக்கத்துக்கு அல்லாஹ்ட றஹ்மத்து கிடைக்கனும்…

      இஸ்லாத்துல விவாகரத்து என்ட விசயம் எவ்வளவு எளிதாக்கப்பட்டிரிக்கு எங்கறது இஸ்லாம் இல்லாதவர்களுக்கு வேனும்னா தெரியமலிருக்கலாம்… ஆனா முஸ்லிமான நமக்கு…..

      இன்டைக்கு காத்தான்குடி காழிநீதிமன்றதுல பெண்டிங்ல எத்துன வழக்கு இரிக்கி? அந்த வழக்குக எவ்வளவு காலமா இரிக்கி? இதப்பத்தி நம்ம ஊரு பொது நிறுவனங்க என்ன நிலைப்பாட்டுல இரிக்கி? முக்கியமா காதியாரு என்ன செய்றாரு? ஊராரு யோசிச்சிகளா..?

      இந்த அப்பாவிப் பொம்புளட கொலைக்கு ஒரு வகையில காத்தான்குடி காழிநீதமன்றமும் ஒரு வகையில வழி சொல்லனும்… இப்ப இல்லாட்டியும் மறுமையில அந்தப்பொண்ணு கேட்டுத்தான் ஆகுவா…

      என்ன தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும் எங்குற மாதிரி அவ பட்ட கஷ்டங்கள யோசிப்ப பாத்தா ரொம்பவும் வேதனையா இரிக்கி.

      வெளிய சொல்ல முடியாமலும், ஒன்னுமே செஞ்சிக்கா முடியாமலும் தங்கட புருஷன்மார்களால மீரட்டி நம்முட ஊருக்க பல அநியாயங்க இப்படி நடந்துகிட்டிருக்கு….. அக்கம்பக்கதாருக்கு கூட தெரியாம… இதையெல்லாம் கேக்கப் பாக்க யாருமில்ல…?

  26. ivanai makkal munnilail kallaal erinthu kolla vendum

  27. munawwar said

    ya allah…

    malai kuura pattah message il ulla unmai ennavanral allah vukkaha
    tirumanam saithu vaipathu mihavum kavanam nanraha visarithu trirumanam
    saiyavum nanri

  28. sajeed said

    subhanallh allah will pece be upon on her…..!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s