க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் வெளியாகும்
Posted by Kattankudi Web Community (KWC) on 21/03/2010
நாடளாவிய ரீதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் ஏப்ரல் மாதம் 2 ஆம் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.
சுமார் 4 ஆயிரம் பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைக்குத் தோற்றிய 5 இலட்சத்து 45 ஆயிரம் பரீட்சார்த்திகளில் 3 இலட்சத்து 40 ஆயிரம் பாடசாலை பரீட்சார்த்திகளும் 2 இலட்சத்து 5 ஆயிரம் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர். பாடசாலை பரீட்சார்த்திகளில் 3 இலட்சம் பேர் முதல் தடவையாக இவ்வருடம் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
வீரகேசரி இணையம்






