பாகிஸ்தானில் விமான விபத்து: 152 பேர் பலி

29/07/2010 Leave a comment

Categories: Video

இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியினால் அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை

29/07/2010 Leave a comment

தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உலக சமூகத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக சர்வகட்சிப் பேரவையின் பரிந்துரைகளை ஆராய்ந்து தீர்வுத் திட்டங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்த போதிலும், இதுவரையில் குறித்த அறிக்கை தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
Read more…

Categories: News

வீழ்ச்சியை நோக்கி ஒபாமாவின் புகழ்!

29/07/2010 Leave a comment

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் புகழ் தாழ்ந்து வருகிறது. காரணம் அவர் தொடரும் போர்களும், பிரிட்டிஷ் பெட்ரோலிய எண்ணெய்க் கசிவும்,வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு உதவ இயலாத தன்மை ஆகியவைகள்தான் என்று புதிய கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

கடந்த வாரம் புதன்கிழமையன்று ராய்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு, அமெரிக்காவின் பொதுமக்கள், அதிபர் ஒபாமா பொருளாதாரத்தை கையாளும் விதத்தினை ஏற்றுக்கொள்ளாத தன்மை அதிகரித்து வருவதாக காட்டுகிறது.

Read more…

Categories: International

கருணா கையாலாகாதவர்!பிள்ளையான் பல்லு பிடுங்கப்பட்ட பாம்பு

29/07/2010 Leave a comment

ஆளும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மீள்குடியேற்றத்துறைப் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் கிழக்கு மாகாணத்தில் காணிகள் படையினரால் அபகரிக்கப்படுகின்றமையைத் தடுக்க முடியாத நிலையில் இருக்கின்றார்.

அதே போல் கிழக்கு மாகாணத்துக்கு முதலமைச்சராக முடிசூடப்பட்டிருக்கும் சிவனேசதுரை சந்திரகாந்தனால் பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்பாக அரசின் ஊதுகுழலுக்கு ஏற்ப ஆடத்தான் முடிகிறதே தவிர கிழக்கு மாகாண தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பாதுகாத்திட முடியாமல் இருக்கின்றமையும் உறுதியாகிறதுஎன்று கிழக்கு மாகாண சபையின் ஈ.பி.ஆர்.எல்.எப் -பத்மநாபா கட்சி உறுப்பினரான இரா.துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.
Read more…

Categories: News

காத்தான்குடி விளையாட்டுக் கழகம் மாவட்ட மட்ட இறுதிப் போட்டிக்கு தெரிவு

28/07/2010 2 comments
கடின பந்து கிறிக்கட் போட்டியில் மாவட்ட மட்டத்தில் காத்தான்குடி விளையாட்டுக் கழகம் தொடர்ச்சியாக திறமைகளை வெளிக்காட்டி வருகின்றது. மாவட்டத்தின் சிறந்த அணிகள் பங்கு பற்றிய 20-20 கல்லாறு வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இச்சுற்றுப்போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் மாவட்ட கிறிக்கட் சபையின் சம்பியனாகிய மட்டக்களப்பு டிஸ்கோ அணியினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Read more…

Categories: Kattankudi News, Sports

பிராட்மேன் சாதனையை தகர்த்த ஜெயவர்தனா

28/07/2010 2 comments

ஒரே மைதானத்தில் அதிக சதம் அடித்து, ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் பிராட்மேன் சாதனையை தகர்த்துள்ளார் ஜெயவர்தனா.  கொழும்பில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில், இலங்கை வீரர் ஜெயவர்தனா, சதமடித்து அசத்தினார். இது டெஸ்ட் அரங்கில் இவர் அடிக்கும் 28 வது சதமாக அமைந்தது. தவிர, கொழும்பு, சின்கிளைஸ் ஸ்போர்டஸ் கிளப் மைதானத்தில், இவர் அடிக்கும் 10 வது சதம் இது.

Read more…

Categories: Sports

அமெரிக்காவின் இரகசிய உளவுத்தகவல்கள் இணையத்தில் வெளியிட்ட விக்கி லீக்ஸ்

28/07/2010 Leave a comment

ஆப்கானிஸ்தானில் இயங்கும் அமெரிக்க உளவுப்படையினரால் ரகசியமாக சேகரிக்கப்பட்ட போர் தகவல்கள் மற்றும் உளவுத் தகவல்கள் அடங்கிய பெரும் தொகையான ஆவணங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விக்கி லீக்ஸ் எனும் இணையத்தளம்.

விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளம் சுமார் 92ஆயிரம் ஆவணங்களை The New York Times, The Guardian, Der Spiegel என்ற பிரபல பத்திரிகைகளுக்கு வழங்கியது.

Read more…

Categories: International

பேசும் பேனா 28.07.2010

28/07/2010 Leave a comment

Categories: Video

பாகிஸ்தானில் விமான விபத்து பயணிகள் கதி?

28/07/2010 Leave a comment

பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே மலைப் பகுதியில் பயணிகள் விமானம் இன்று காலை விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த 152 பேரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Read more…

Categories: Breaking News

ரமழானை முன்னிட்டு இணையத்தில் விசேட பாடத்திட்டம்

27/07/2010 Leave a comment

இன்னும் இருவாரங்களில் ஆரம்பமாகவுள்ள ரமழான் மாதத்தை முன்னிட்டு இஸ்லாஹ் என்ற அமைப்பு எதிர்வரும் புனித றமழான் மாதத்தில் முஸ்லிம் மக்களது நன்மை கருதி இணையம் மூலம் பாடத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

Read more…

Categories: Islamic

மட்டக்களப்பில் பாலம் இடிந்து விழுந்ததால் சிரமம்

27/07/2010 Leave a comment

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட லேடி மெனிங் ட்றைவ் வீதியில் பாலமொன்று இடிந்து விழுந்து ஒரு வாரத்தைக்கடந்தும் இன்னும் திருத்தியமைக்காமையினால் இப்பாதையால் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு கஷ்டங்களுடன் வேறு பாதைகளைப் பயன்படுத்த வேன்டியுள்ளது.

Read more…

Categories: News

இந்தியா தனது தேவைக்காக இலங்கைப் பிரச்சினையை கையாள்கின்றது

27/07/2010 Leave a comment

முஸ்லிம் அரசியலில் மிகப் பெரிய சந்தேகங்கள் இருக்கின்றன. புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டாயிற்று. இனிமேல் தனித் தரப்பு என்ற கோசத்திற்கு இடம் கிடையாது. இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை என்பது இந்தியாவின் தேவைக்காக மட்டும் அடிக்கடி பேசும் விடயமாகவுள்ளது. இங்கிருந்து இந்தியாவிற்கு படையெடுத்துச் சென்று பேசினாலும் இங்கு பழைய குருடி கதவைத் திறவடி என்ற கதையாகவே இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான் ரவூப் ஹக்கீம் கல்முனையில் நடை பெற்ற கூட்டமொன்றில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

Read more…

Categories: News

பேசும் பேனா 26.07.2010

27/07/2010 Leave a comment

Categories: Video

பராஅத் இரவு என்ற பெயரில்..

27/07/2010 1 comment

எழுதியவர்: மௌலவி இம்தியாஸ் ஸலஃபி

இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடை பிடிக்கும் அமல்கள் (செயற்பாடுகள்) ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த அமல்கள், இபாதத்கள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள், மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன.

அமல்களை நிர்ணயிப்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித் தோன்றல்களோ அல்ல! துர திஷ்டவசமாக இன்று இந்நிலை பரவலாக காணமுடிகிறது.

Read more…

Categories: Islamic

தீக்குளித்த ஐ.தே.க. ஆதரவாளர் உயிரிழந்தார்

27/07/2010 Leave a comment

ஐ.தே.கவின் தலைமை அலுவலகமான சிறிகொத்தாவுக்கு முன்னால் நேற்றுமாலை தீக்குளித்த நபர் இன்று அதிகாலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிரிழந்தவர் ஐ.தே.கவின் ஆதரவாளர் எனவும் கட்சியில் ஐக்கியமின்மை குறித்து அந்நபர் விசனமடைந்திருந்ததாகவும் ஐ.தே.க. பிரதிதித்தலைவர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.  

Tamilmirror:

Categories: News

விமல் வீரவன்சவுக்கு ஒரு கடிதம்

26/07/2010 2 comments

ஐ.நா. நிபுணர் குழுவைக் கலைக்கும்வரை சாகும்வரையிலான உண்ணாவிர தத்தைத் தொடரப் போவதாக நீங்கள் அறிவித்தபோது உண்மையிலேயே ஆச் சரியமாக இருந்தது.

அதன்போது உயிர் பிரிந்தால் போராட்டத்தைத் தொடரு மாறு உங்களது ஆதரவாளர்களைக் கோரியிருந்தீர்களே -அதுதான் அதைவிட வும் ஆச்சரியமானது.

அரசியல்வாதிகள் உண்ணாவிரதம் இருப்பதில் அப்படி ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என நீங்கள் எண்ணக் கூடும். இதுவொன்றும் சாதாரண உண்ணா விரதம் இல்லை. உயிரையே கொடையாகக் கொடுக்கும் உண்ணாவிரதம் இது.

Read more…

Categories: Politics

வடக்கு கிழக்கு இணைப்பு: கழுவிய மீனில் நழுவிய மீனாய் முஸ்லிம் காங்கிரஸ்

26/07/2010 Leave a comment

தமிழர் தாயகக் கோட்பாட்டில் வடக்குக் கிழக்கு இணைப்பு மைய விடயமாக நீண்டகாலமாக இருந்து வந்தது; இன்னும் இருந்து வருகிறது. இவ்விணைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி ஏறத்தாழ நான்கு வருடங்கள் முடிந்துள்ள நிலையில், இப்பிரச்சினை மீண்டும் கிளம்பியுள்ளது.

வரவு-செலவுத் திட்டம் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மு.கா. பாராளுமன்ற உறுப்பினர் இவ் வாறு கூறியுள்ளார்: “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா சென்று வடக்குக் கிழக்கை மீண்டும் இணைப்பதற்கான நட வடிக்கையை மேற்கொள்ளுமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கின்றது. இதை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்காது. இந்தியாவில் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்து விட்டு இங்கு வந்து முஸ்லிம்களு டன் பேச வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது. கூட்ட மைப்பின் இந்த இரட்டை நிலைப்பாட்டை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் ஏற்காது. வடக்குக் கிழக்கை மீண்டும் இணைக்குமாறு கோரிக்கை விடுக்கும் உரிமை கூட்டமைப்புக்கு இல்லை.”

Read more…

Categories: Articles

கிராமிய அபிவிருத்தியில் இஸ்லாமிய வங்கியின் பங்கு

26/07/2010 Leave a comment

மூலம்: எம். ஏ. கான்

தமிழில்: அஷ்ஷெய்க் ஏ. எ மிஹ்ழார்

கிராமிய அபிவிருத்தியின் இயல்பு

கிராமிய அபிவிருத்தி என்பது ஒரு சிக்கலான தோற்றப்பாடாகும்.

கிராமப் பகுதிகளில் வாழும் மக்களின் உற்பத்தித் திறன், உழைக்கும் ஆற்றல் என்ப வற்றை நிரந்தரமான அடிப்படையில் மேம் படுத்துவதன் மூலம் அவர்களது வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையுடன் கிராமிய அபிவிருத்தி தொடர்புற் றுள்ளது. 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலக அபிவிருத்தி அறிக்கைக்கிணங்க அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட வறிய மக்கள் உள்ளனர். அவர்களுள் பெரும்பாலா னோர் கிராமப் பகுதிகளில் வாழ்கின்றனர். இக்கிராமிய மக்களின் பிரச்சினை கள் பலதரப்பட்டதாக இருக்கின்றன.

Read more…

Categories: Articles

மாணவ சமுதாயத்தின் நடத்தைக் கோலங்கள்

26/07/2010 Leave a comment

பல்கலைக்கழகங்களில் உருவாகின்ற வன்முறைகளால் மாணவர் பலரின் எதிர்காலமே சூனியமாகிப் போயுள்ளது. பகிடிவதையென்பதன் பேரில் உருவான சிறிய சேஷ்டைகள் இறுதியில் வன்முறையில் முடிவடைந்து, சம்பந்தப்பட்ட சிரேஷ்ட மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்வியையே இடைநடுவில் கைவிட்ட சம்பவங்களும் நாட்டில் இடம்பெற்றுள்ளன.

பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவனான வரப்பிரகாஷ் என்பவர் மிகக் கொடுமையான பகிடிவதைக்கு உள்ளாகி பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியதையடுத்து, இவ்விவகாரமானது முன்னர் அனைவரையும் விழிப்படைய வைத்தது. பகிடிவதைக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டதுடன் பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று நடவடிக்கையும் தீவிரமடைந்தது. Read more…

Categories: News

கிழக்கு மாகாண விளையாட்டு விழா: திருகோணமலை மாவட்டம் முதலிடம் (படம் இணைப்பு)

25/07/2010 Leave a comment

கிழக்கு மாகாண விளையாட்டு விழா மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சனிக்கிழமை (24.7.2010) ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை (25.7.2010) மாலை நிறைவு பெற்றது. இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண ஆளுனர் உட்பட மகாண அமைச்சர்கள் மற்றும் அதிதிகள் கலந்து கொண்டனர்.

இவ்விளையாட்டு விழாவில் திருகோணமலை மாவட்டம் 176 புள்ளிகளைப் பெற்று 54 தங்கம், 39 வெள்ளி 30 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று முதலாமிடத்தினைப் பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் 167 புள்ளிகளைப்பெற்று 38 தங்கம் 39 வெள்ளி 20 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாமிடத்தினையும் அம்பாறை மாவட்டம் 72 புள்ளிகளைப் பெற்று 28 தங்கம் 36 வெள்ளி 37 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.

Categories: Sports